Thursday, September 30, 2010

காக்கைக்கா காகூகை

"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
 கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
 காக்கைக்குக் கைக்கைக்கா கா"
 - காளமேகப் புலவர்


அர்த்தம் -
காக்கை பகலில் ஆந்தையை ( கூகையை ) வெல்லும். 
கூகை இரவில் காக்கையை வெல்லும். 

அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். 

கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகி விடக்கூடும்

No comments:

Post a Comment