Friday, December 17, 2010

Kamalharan Poem - நைவதே நென்றனின் நை

கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொளிப்புரை கிறிக்கியும்
ஆருக்கும் விளங்காததாம்

அதை பயின்று அதை உணர்ந்து அதை துதிப் பதுவன்றி
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்த தென்றது
விதி ஒன்று செய்வித்ததாம்

அதை வெல்ல முனைவோரை சதிகூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசோ்க்கும் திருமூலமாம்

குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்
என்ற குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது ஜென்மம் தந்தருளுமாம்

கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாடலாம்

நேர்கின்ற நேர்வெலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்தது காக்குமாம்

நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரைப் பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்

பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்கருளிடும்
பரிவான பரப்பிரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாற தொளுசக்தியை
மற்றவர் வையுபயம்கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்

ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிக்கச் சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை

தையாட ஊசியிர்த் தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனித்த பின்
நைவதே நென்றனின் நை

No comments:

Post a Comment