Saturday, November 20, 2010

தினம் பாடி வா மனமே

கவிஞர் அறிவுமதி எழுதி வித்தியாசாகர் இசையில் சுதாரகுநாதன் பாடிய... மந்திரப்புன்னகை திரைப்பட  பாடல் 

என்ன குறையோ


கண்ணா கண்ணா கண்ணா

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் (2)

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாழாத துன்பம் நோ்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைபடபான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான் - அந்த
கண்ணனை அழகு மன்னனை தினம் பாடி வா மனமே

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

கண்ணன் கண்ணன் கண்ணன்

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்

இணைந்து வரலாம் பிரிந்தும் தகலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனி மூட்டம் மலையை மூடலாம்
பழி கேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான் அவன்
இசை மழையாய் உலகினை அணைப்பான் - அந்த
கண்ணனை கனிவு மன்னனை தினம் பாடி வா மனமே

No comments:

Post a Comment